Charles Wood (wood's despatch) சார்லஸ் வூட் நடவடிக்கை 1854 என்பது நமது கல்வி வரலாற்றின் மைல் கல் என்று சில கல்வியலாளர்கள் பெருமையோடு சித்திரிப்பதைப் கேட்ருக்கலாம் ?? சார்லஸ் வூட், போதனை அடிப்படையிலான கல்வி பாணியை தொடக்கபள்ளிகள் மட்டுமேயன்றி பல்கலைக் கழகங்களிலும் நிறுவினார். அதுமட்டுமல்ல இன்றைய தனியார்மய கல்விக்கு பலமான அஸ்திவாரத்தை போட்டவரும் இவரே. அதுமட்டுமா இவருடைய அரசியல் சூட்சுமம் இன்னும் தொடர்கிறது இங்கு.
தொழிற்கல்வி எனும் பெயரில் இன்று பன்னாட்டு முதலாளிகளின் வேலையாட்களை உற்பத்திசெய்யும் அவலத்தின் வேரும் அங்கே தான் நமக்குத் தெரியவருகிறது (தெரிஞ்சுருச்சா tongue emoticon - காஞ்சனா பாணி).
மருத்துவக் கல்வி (நமது சித்த வைத்தியம் நாட்டு வைத்தியம் தடை செய்யப்பட்டு ஆங்கில வைத்தியம் அறிமுகமான கல்வி !!!)
நம் ராட்டையை, ஏர் கலப்பையை தூக்கி எறிந்த இயந்திர பொறியல் கல்வி இவை தொழிற்கல்வி என உட் நடவடிக்கை (சமூகம்) அழைத்தது, அதிலும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவராக உருவாகாமல் மேற்க்கத்திய அறிவியலின் எடுபிடிகள் உருவாக்கப்படும் பட்டறைகளாய் இந்த கல்லூரிகளின் வகுப்பறைகள் மாறிப்போனதும் அப்போது தான். விவசாயம் கல்வியில் ஓரம்கட்டப்பட்டது, அதன் குரல்வளையை நெரித்து, தொப்புள்கொடியை அறுத்து, வேரற்று அழித்து, மனிதநேயமற்ற மண்ணோடு ஒட்டாத ஒன்றுக்குக் "கல்வி" என பெயரிடபட்டதும் 1854 ல் தான், பிரித்தானிய பேரரசிடம் இருந்து அரசியல் விடுதலை பெற்றாலும் இன்னும் மாறவில்லை அந்த கல்வி கொள்கைகள் !!!
Image Courtesy
புகைப்படம் - Steve Cutt Illustrations
புகைப்படம் - Steve Cutt Illustrations

No comments:
Post a Comment