Monday, 27 July 2015

Bye Bye My Inspiration !!

Bye Bye My INSPIRATION !!!

என்னுடைய அக்னி சிறகு பறந்துவிட்டதாக தான் தோன்றுகிறது, 
என்னுடைய கனவு தொலைந்து விட்டதாக நினைக்கவில்லை,
அவர் அவருடைய லட்சியத்தை அடைய சென்றிருக்கிறார் என்றே நம்புகிறேன்,
அது 2004, வாழ்க்கை என்னவென்று என்பதை அறியாத எனது பள்ளிப்பருவம், அந்த வாழ்க்கையை முழுவதும் மாற்றியமைத்தது அந்த ராமேஸ்வரம் பயணம், அவரின் இல்லத்திற்கும் விசிட், 

சனாதிபதி என்பவர் நாட்டின் முதல் குடிமகன் President of India என்று சொன்னாலே அன்று எனக்கு புல்லரிக்கும் [இன்னைக்கு கேக்காதீங்க], அந்த குடிமகனின் வீட்டைகண்டவுடன் எனக்கு எழுந்த கேள்வி இந்த வீட்டுல இருந்தா  நம்ம ப்ரெசிடென்ட் அங்க போனாரு என்று என் அப்பாவிடம் கேட்டேன் அவரு ஆமாண்டான்னு சொன்னாரு, எனக்கு ஒன்னும் வெளங்கல. ஒவ்வொரு விடயம் நான் அங்கு பார்த்ததும் எனது நம்பிக்கை துளிர்விட்டது, விடாமுயற்சி என்பது என்ன என்பது புலன் ஆக ஆரம்பித்து, வாழ்க்கையில் எத்தனை அடுக்கில் தடைகளை வென்றெடுத்து இந்தியாவின் முதல் 
குடிமகனாக மாறினார் என்பதை என் தந்தை கூறி ,ஒரு புத்தகத்தையும் அளித்தார் அது 
India Vision 2020, என்னுடைய முதல் ஆங்கில புத்தகம், எனக்கு கிடைத்த அறிய பொக்கிஷம், 

அந்த உத்வேகத்தோடு அவரிடம் ஒரு கேள்வி ஏன் கேட்ககூடாது என்று நினைத்து கடிதம் எழுதினேன் 

"உயிர் என்பது என்ன அது எங்கு இருக்கிறது"
என்ற கேள்வியை அனுப்பினேன் எங்கு 

To 
The President of India, 
Dr. APJ. Abdul Kalam, 
Rastrapathi Bhavan, 
New Delhi - 110 004 

ஏனோ பதில் இல்லை, 
சரி விட்றா விட்றா அவருக்கு ஆயரத்து எட்டு வேலை இருக்கும் என்று நெனச்சுட்டு விட்டுட்டேன் என்று இப்ப நெனச்சேன் அன்று வருத்தமே நிறைந்து இருந்தது...

அடுத்து 2006 நான் 9 ஆம்வகுப்பின் அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருந்த நேரம், அப்பொழுது பொள்ளாச்சி மகாலிங்கம் 
கல்லூரிக்கு அவர் வருகை என அறிந்தேன் மட்டற்ற மகிழ்ச்சி, உள்ளபோய் அவருடைய பேச்சை கேக்கமுடியுமா 
என்ற ஏக்கம், என்ன செய்ய உள்ளே போக முடியாது என்பதே நிதர்சனம்,
கடைசியா அவரு பேசின உரையாவது கேட்போம்னு கேட்டு கடைசில ஒரு நிருபர் நண்பரிடம் இருந்து 
குருந்ததகுடை  வாங்கிட்டு வந்துட்டாரு அப்பா, பாருங்க, வீட்டுல CD Player இல்ல அதையும் கடன் வாங்கி 
அவரு பேசுன உரையையும் கேட்டேன் அதுல அய்யா 

"நம்பிக்கை என்ற எந்திரம் ஒருவனிடம் நிச்சயம் 
அற்றுப்போகக்கூடாது, மற்றவர்கள் மேல் நம்பிக்கை வைகரீங்களோ 
இல்லையோ உன்மேல் நிச்சயம் நம்பிக்கைவை" 

என்று பேசினார், அன்றும் துளிர்விட்டது என்னுடைய நம்பிக்கை, கனவு, 
பொள்ளாச்சி வந்தும் அவரை பார்க்க முடியவில்லையே 
என்ற ஏக்கமும் பரிதவிப்பும் இன்னும் என்னை விட்டு அகலவில்லை.

மீண்டும் ஒரு வாய்ப்பு கிட்டியது எனக்கு, நான் பட்டய படிப்பு படித்து கொண்டிருக்கும் பொழுது எமது கல்லூரிக்கு 
அய்யா வருகை, செம சந்தோசம், இப்பவாச்சும் எப்படியாவது கேள்விய கேக்கணும்ன்னு ஆசை, என்ன செய்ய ஏன் நேரம் 
நான் அந்த கேள்விகேட்கும் லிஸ்ட்ல  இல்ல பொறியியல் மாணவர்கள் மட்டும் தான் அந்த லிஸ்ட்ல இருந்தாங்க :( 
அப்ப கலாம் அவர்கள் 
பண்ணாரி கல்லூரியில் நிகழ்ச்சியை முடிச்சுட்டு இங்க வர நேரம் கடந்தது கடைசியில் ஒருவழியாக 
மாலை 9.30 மணி போல வந்தார் என்று நினைக்கிறன், வந்த உடனே அவர் சொன்ன வாக்கியம் எல்லோரையும் சிலிர்த்தது, நான் 
இங்க வரும்போது சீக்கிரம் உரையை முடிக்கணும்ன்னு நெனச்சேன் உங்கள் அன்பு என்னை கட்டிபோட்டு நிறைய நேரம் பேசனும்ன்னு இருக்கேன் என்றார்,
பல இடங்களுக்கு போயிருக்கேன், ஏன் இந்த ஊருக்கும் வந்துருக்கேன் 
ஆனா இந்த கல்லூரி மாணவர்கள் இவளோ ஆர்வமா இவளோ மணிநேரம் ஆகியும்  இருப்பது வியப்பை அளிக்கவில்லை என்றார், 
ஏன் என்றால் கிராமபுற மாணவர்கள் தான் அதிகம் பேர் தங்களுடைய வாழ்கையை கற்றவர்கள் 
என்று சொன்னார் இன்னும் நல்ல ஞாபகம் இருக்கு, 
பல மாணவர்கள் எப்படி நெனச்சாங்களோ நான் அவரை பாக்கனும்ன்னே இருந்தேன், 

என்ன செய்ய அதுவும் 10 வரிசை பின்னால் இருந்து சரி இப்படிதான் இவரை இன்றும் பார்க்கனும்ன்னு இருக்கு என்று நொந்துபோய் உக்காரவில்லை  
சரி பக்கவாட்டில் மாணவர்களும் ஆசிரியர்களும் காவலுக்கு நின்னுட்டு இருந்தாங்க, அப்படியே அவங்களோட போய் நின்னு, பேச்சு முடிக்கும் தருவாயில் 
அவருகூட ஒரு கைகுலுக்கல் ஆச்சும் குடுப்போம்னு யோசிச்சு, நண்பன் ஒருவனிடம் ஒரு காவல் அடையாள சின்னத்தை வாங்கி சட்டைல குத்திட்டு நின்னுட்டேன் அவரு பேசறதை கேட்டுகொண்டே.

12.30 க்கு நினைக்கிறன் கெளம்பற நேரமா பார்த்து அரங்கம் முன்னாடி போனேன், பலத்த பாதுகாப்பு [ஆசிரியரின் பாதுகாப்பு தான்] போலீஸ் ஒரு 3 பேரு இருந்தாங்க[பாத்துக்கோங்க முன்னால் மூத்த மகனுக்கு இவ்வளவே பாதுகாப்பு, அவர் அதை விரும்பாத மனிதர்], சுழல் சிவப்பு விளக்கு ஒளிர்விட்டு கொண்டே இருந்தது
அவர் வெளியே வரும் வேளை, அரங்கத்தின் வெளியே 8 மாணவர்கள் நின்னுட்டு இருந்தாங்க வரிசையா,  நானும் அவங்களோட 
போய் நின்னுட்டேன், உரையை முடித்துவிட்டு அரங்கை விட்டு வெளியே வந்தார், வந்த மனிதர் எல்லோருக்கும் வணக்கம் வைத்தவாறே வந்தார், திடீரென்று  கையை நீட்டினேன் கைகுலுக்க சற்றும் யோசிக்காமல் அவரும் என்னுடன் கைகுலுக்கினார், அந்த நொடி என் வாழ்நாளில் நிச்சயம் மறக்க முடியாத நாள் july 17, அந்த கேள்வியை மறுபடியும் கேட்க ஆசை ஆனால் 
ஏனோ இந்த நிமிடம் சிறு தடுமாற்றம் கேட்க, அது இன்றளவும் என்னால் விவரிக்க முடியாத நிமிடங்கள், மீண்டும் இவரை என்று சந்திப்போம் என்றே வினா தொற்றி கொண்டிருந்தது, அது நடக்கவும் இல்லை :(


மீண்டும் ஒருமுறை அவரை பார்த்தேன் SRM பல்கலைகழகத்தில், அந்த கல்லூரி மாணவர்களே வழிமறித்து விட்டனர் அவரை பார்க்க, அன்றும் 100  அடி தொலைவில் இருந்து பார்க்க முடிந்தது அன்று அவர் உதிர்த்த விதைகள் 

"உங்களுடைய வருங்காலத்தை நீங்கள் மாற்ற இயலாது ஆனால் உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றவியலும், அப்படி மாற்றினால் உங்களுடைய வருங்காலம் நிச்சயம் பிரகாசமே !!"

எப்படி அவருடைய வாழ்கையில் பல தடைகளை தாண்டி நாட்டின் முதல் மகனாக சென்று சேர்ந்தாரோ அதுவே என்னுடைய 
உந்துகோல், அதை ஒளவையாரும் சொல்லிருக்காங்க 

"அரியது கேட்கின் வரிவடிவேலோய் அரிது அரிது மானிடறாதல் அரிது 
மானிடராயினும் கூன் குருடு செவுடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவுடு பேடு நீங்கி பிறத்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயினும் வானவர் பாடும் வழி பிறந்திடுமே

கொடியது கேட்கின் வரிவடிவேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றுனாற் கொடுனோய்
அதனினும் கொடிது அன்பிலா பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால் உணவுன்பது தானே"

இவர் சொன்னதுபோல் வாழ்கையின் லட்சியம் எதுவோ அதை முன்னிறுத்தி சென்றிடு, அது கிடைக்காவிடினும் நம்பிக்கையையும், கனவையையும் இளந்துவிடதே, உனக்கு கிடைத்த அணைத்து வளங்களையும் உபயோகித்து மானுட வாழ்க்கைக்கு நன்றி செய் அதை சீண்டாமல் !!

இன்று அவர் இறந்த செய்தி என் இதயத்திற்கு இடிதான் அந்த அக்னி சிறகு தான் கண்டுபிடித்த ஏவுகனையோடு அந்த கருப்பு துளையின் வெளியோட்டதிற்கு பயணிக்கிறார் என்ற நம்பிக்கையில் நான் அவர் சொன்ன அந்த பாதையை வகுத்து அவருடைய அந்த 2020 இலட்சியத்தை நிச்சயம் வெல்ல போராடுவேன் போராடுவோம்   

ஆனால் நிதர்சனம் என்னவோ நாம் கடைசி நிமிடம் வரை நமது கனவுக்காக ஓட வேண்டும் 
என்பதை தான் அய்யா நமக்கு சொல்லியிருக்கிறார், அது என்னளவில் நிச்சயம் உறுதி, கடைசி வரை அவருடன் அந்த கேள்விக்கு பதில் இல்லை :( கேட்க முடியவும் இல்லை !!!

அவர் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசிய வார்த்தைகள் 

3000 வருடங்களுக்கு முன்னால் கணியன் பூங்குன்றனார் புறநானூறில் சொன்னதை 
நான் இங்கே சொல்ல விரும்புகிறேன் 

அது யாதும் ஊரே யாவரும் கேளிர், மேலும் இந்தியாவில் நாங்கள் இதையும் சொல்லுவோம் 

Where there is righteousness in the heart there is beauty in the character, when there is beauty in the character there is harmony in the home, when there is harmony in the home there is order in the nation, when there is order in the nation, there is peace in the world.

இறப்பு என்பது இயற்க்கை அதற்கும் தான் நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் அப்படிப்பட்ட சில இறப்புகள் சில மனிதர்களின் வாழ்கையை புரட்டிபோடும் பாடம் கற்பித்தும் கொடுக்கும் அந்த இற(ழ)ப்பு எனது வாழ்வில் இருமுறை வந்து சென்றிருகிறது மீண்டும் ஒருமுறை, 
அந்த இழப்பு வரலாற்றில் நிச்சயம் நிலை பெற நாம் நிச்சயம் உழைப்பது முக்கியம், வரலாறு திருத்த முயன்றால் முடியும் ஆனால் 

கலாம் அவர்களை பொறுத்தவரையில் காலம் அவரை வென்றதோ இல்லையோ காலத்தை கலாம் வென்றுவிட்டார் ...


Bye Bye my INSPIRATION Dr. Kalam ...


1 comment: